சென்னை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!
சென்னை: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு உட்படலாம் என்பதை குறிக்கும் வகையில் 4ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு நீடிக்கிறது.
Advertisement
Advertisement