தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் இணைப்பு பேருந்து சேவை அதிகரிக்க மெட்ரோ நிறுவனம் முடிவு

 

Advertisement

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் இணைப்பு வாகனங்கள் இயக்க, துணை நிறுவனம் ஒன்றை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், கால் டாக்ஸி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும்.

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் சென்று, வர வசதியாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி பயணம் செய்வோர் எண்ணிக்கை நான்கு லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடியும் போது, பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பயணியர் தடையின்றி வந்து செல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையின் பயன்களை சமீபகாலமாக பயணியர் அதிகளவில் உணரத் துவங்கியுள்ளனர். இதனால், தினசரி பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் சராசரியாக, நான்கு லட்சத்தை கடந்துள்ளது.

பயணியரின் வருகையை அதிகரிக்க இணைப்பு வாகன வசதி என்பது முக்கியமானதாக இருக்கிறது. மாநகர பேருந்துகள், சிற்றுந்துகள் மட்டுமே போதாது.

எனவே, தனியாக புதிய துணை நிறுவனத்தை துவங்க உள்ளோம். இதற்காக, மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். இதற்கான, ஒப்புதல் கிடைத்தவுடன், கால்டாக்சி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்களை, ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய நிலையங்களில் இருந்து 10 கி.மீ., துாரமும், சிறிய நிலையங்களில் இருந்து 5 கி.மீ., துாரம் வரை, இணைப்பு வாகனங்கள் இயக்கப்படும்.

முதல்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்கப்படும். அடுத்த கட்டமாக, இந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இணைப்பு வாகனங்களில் நியாயமான அளவில் கட்டணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Advertisement

Related News