தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டவாளத்தில் தலை வைத்து சென்னை ஐடி ஊழியர் தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ளது குமடிபாளையம். இந்த ஊரை சேர்ந்த ராஜவேலு மகன் கவீன்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு தனது பெற்றோருக்கு போன் செய்த கவீன் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்படி சென்னையில் இருந்து பழனி எக்ஸ்பிரஸ் மூலம் அவர் இன்று அதிகாலை 3.45மணியளவில் மோகனூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை பெற்றோர் தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர்.

Advertisement

இந்தநிலையில் மோகனூர் ரயில் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள தண்டவாளத்தில் இன்று காலை தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் சடலமாக மீட்கப்பட்டவர் ஐடி ஊழியர் கவீன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மோகனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கவீன், அவர் வந்த ரயில் சென்ற பிறகு அந்த பகுதியில் மற்றொரு ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News