தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு குளங்கள் அமைக்கலாம்!!

சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கிளப் மைதானம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனியாருக்கு குத்தைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னரும் தொடர்ந்த நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு வாடகை பாக்கி வைத்திருந்தது. இதை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 160 ஏக்கர் நிலத்துக்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தும்படி ரேஸ் கிளப்பிற்கு உத்தரவிட்டிருந்தது.

Advertisement

வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கிளப் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை அரசு கையகப்படுத்தி பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ரேஸ் கிளப் குத்தகையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க 4 குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்து வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி இடைக்கால உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News