சென்னையில் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்!!
சென்னை : சென்னையில் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கழுத்து பட்டை இன்றி செல்லப் பிராணிகளை அழைத்து சென்றால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் செல்லப் பிராணிகள் பொதுவெளியில் கழிவு ஏற்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement