தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கோட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மின்சார ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் இருந்து ரூ.8 கோடி அபராதம் வசூல்!!

சென்னை : சென்னை கோட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.8 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்களில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பலர் டிக்கெட் எடுக்காமல், பயணம் செய்வதாக புகார்கள் எழுந்தன.

Advertisement

இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனைகளில் சென்னை கோட்டத்தில், நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்காமல், பயணம் செய்த 30,000த்திற்கும் மேற்பட்டோர் பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடம் ரூ.8.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருந்த இடத்தில் இருந்தே டிக்கெட் எடுப்பதற்காக இணையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் மீறி டிக்கெட் இன்றி பயணிப்போருக்கு அபராதம் மற்றும் சிறை உள்ளிட்ட தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement