தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளரின் ஐபோன் அடிப்படையில் போலீசார் விசாரணை!!

சென்னை: போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளரின் ஐபோன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே திரைப்பட இணை தயாரிப்பாளரான சர்புதீன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு தயாரிப்பாளரான தினேஷ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையிலே அடைத்த நிலையில், ஒருநாள் காவலில் எடுத்து திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

குறிப்பாக இவருக்கு சினிமா வட்டாரத்தில் அதிகப்படியான தொடர்பு இருப்பதினால் அங்கு ஏதேனும் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தினேஷ் ராஜிடம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஐபோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஐபோனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிய போலீசார், தினேஷ் ராஜின் ஐபோன் தரவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபோனில் கிடைத்த தரவுகளை வைத்து பண பரிவர்த்தனை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பார்ட்டி உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளதால் அங்கு ஏதேனும் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்கி பயன்படுத்தினரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News