தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சோழிங்கநல்லூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், தடையை மீறி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் கடைகளில் விற்கப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆகியோர் ஆங்காங்கே சோதனை நடத்தி அவ்வப்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில், சென்னையில் ரூ.28 லட்சம் மதிப்பிலான 3 டன் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சென்னை போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 4 ஆயிரம் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பெருங்குடி குப்பை கிடங்கில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ் செல்வன் முன்னிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நேற்று அழிக்கப்பட்டது. மேலும், போலீசார் முன்னிலையில் 4 ஆயிரம் மதுபாட்டில்களும் அழிக்கப்பட்டது.

Advertisement

Related News