தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13 கிலோ குட்கா பறிமுதல்: துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை

Advertisement

திருவொற்றியூர்: சென்னை புறநகரில் மணலி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ குட்கா போதைபொருள் பாக்கெட்டுகளை நேற்று மாலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான மணலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக நேற்று செங்குன்றம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், மணலி காவல்நிலைய எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலையோர பெட்டிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ குட்கா போதைபொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி துணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், செங்குன்றம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையப் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா போதைபொருள் விற்பனையைத் தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி செங்குன்றம், சோழவரம், மாதவரம் பால்பண்ணை, மணலி உள்பட பல்வேறு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து 13 கிலோ எடையிலான குட்கா போதைபொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்குன்றம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைபொருள் விற்பனையை முழுவதுமாக தடுக்கும் வகையில் 18 சிறப்பு காவலர் குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Advertisement

Related News