சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான நறுமண பொருட்கள்: இலங்கையை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை
Advertisement
அவற்றில் சுமார் 20 பார்சல்களில் 20 கிலோ அகில் மரக்கட்டைகள் இருந்துள்ளன. இவை சந்தனத்தை விட அதிக நறுமணம் கொண்டவை. மேலும் அகில் மரத்தின் பிஸிலில் இருந்து தயாரிக்கப்படும் அகர் அத்தர் எண்ணெய் 15க்கும் மேற்பட்ட பாட்டில்களில் இருந்தது தெரியவந்தது. இந்த மரத்தை வீடுகளில் வளர்ப்பது சர்வதேச வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். விலை உயர்ந்த நறுமண பொருட்களை எடுத்து வருவதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். அவற்றை கடத்தி வந்த 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement