தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான நறுமண பொருட்கள்: இலங்கையை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக விமானத்தில் கடத்தி வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைநகர் கொழுப்பில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் வந்த 2 பயணிகளின் சூட்கேசில் இருந்து அதிகப்படியான நறுமணம் வீசியுள்ளது. அவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போதும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களின் சூட்கேஸை சோதனை செய்தனர்.
Advertisement

அவற்றில் சுமார் 20 பார்சல்களில் 20 கிலோ அகில் மரக்கட்டைகள் இருந்துள்ளன. இவை சந்தனத்தை விட அதிக நறுமணம் கொண்டவை. மேலும் அகில் மரத்தின் பிஸிலில் இருந்து தயாரிக்கப்படும் அகர் அத்தர் எண்ணெய் 15க்கும் மேற்பட்ட பாட்டில்களில் இருந்தது தெரியவந்தது. இந்த மரத்தை வீடுகளில் வளர்ப்பது சர்வதேச வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். விலை உயர்ந்த நறுமண பொருட்களை எடுத்து வருவதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். அவற்றை கடத்தி வந்த 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement