தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட்தலைவர்கள் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழை வழங்கினர்.

Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அளித்த பேட்டியில்,, ‘‘எங்கள் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டுமென அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். அதேபோல், இந்திய சோவியத் கலாசார கழகத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டுமென கோரியுள்ளோம். நிச்சயம் பரிசீலிப்பதாக கூறினார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். அறிவாலயம் வந்தாலே கூட்டணி பேச தான் வருவோமா? ஏன் பதற்றமான செய்திகளை உருவாக்குகிறீர்கள்?. நாங்கள் முதல்வரை மக்கள் பிரச்னைக்காக சந்திக்க வர மாட்டோமா?,’என்றார்.

Advertisement