தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை ஆலந்தூரில் பிரபல உணவக கட்டிடத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்ட் நிலம் மீட்பு

சென்னை: சென்னை ஆலந்தூரில் உள்ள பிரபல ஓட்டல் குத்தகை இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை சர்வே எண் 146/2 ல் 15 கிரவுண்ட் அரசு நிலத்தில் குத்தகை காலம் முடிந்தும் அந்த இடத்தில் ஓட்டல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

Advertisement

பிரபல உணவகம் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்னேகா உத்தரவின்பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், செந்தில், நடராஜன், வருவாய்துறை அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் அதிகாலையில் வந்து உணவகத்தில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி, முகப்பு கதவினை பூட்டி சீல்வைத்தனர்.

மேலும் அந்த இடத்திற்கு அருகே ஜி.எஸ்.டி. சாலை, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளதால் இந்த 15 கிரவுண்ட் நிலம் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement