தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானநிலையத்தில் மிக மெதுவாக பாதுகாப்பு சோதனை; வெளிநாட்டு விமான புறப்பாடு தாமதம்: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மிக மெதுவாக நடைபெறுவதால் சிங்கப்பூர், துபாய், தாய்லாந்து, ஹாங்காங் உள்பட பல்வேறு வெளிநாட்டு விமானங்களின் புறப்பாடு நேரங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Advertisement

சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இன்று காலை சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்களின் புறப்பாட்டில் சுமார் ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. முன்னதாக, பன்னாட்டு முனையத்தில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமிருந்ததால், அங்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிடும் பணிகளைத் தாமதப்படுத்தினர்.

இதில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டதால், இன்று காலை சிங்கப்பூர், ஹாங்காங் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்களின் புறப்பாட்டிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் புனே, ஐதராபாத், தூத்துக்குடி நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

ஏனெனில், வடமாநிலங்களில் கடும் மழை மற்றும் மோசமான வானிலை நிலவி வருவதால், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களின் வருகை தாமதம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு விமான சேவையிலும் தாமதம் ஏற்பட்டதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனினும், இதுபோன்ற விமான புறப்பாடுகளில் பலமணி நேர தாமதம் காரணமாக, அதில் செல்ல வேண்டிய பயணிகள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News