தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: 10க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பாடு தாமதம்; சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பல்வேறு விமானங்களில் வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்பயணிகளுக்கு வழக்கமான பலகட்ட பாதுகாப்பு சோதனைகள் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் இருந்து ஜெர்மனி தலைநகர் பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்சா ஏர்லைன்ஸ், துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கோலாலம்பூர் செல்லும் ஏர்ஏசியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தோகா செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ், தாய்லாந்து செல்லும் தாய் ஏர்லைன்ஸ், சார்ஜா மற்றும் அபுதாபி செல்லும் ஏர்அரேபியன் ஏர்லைன்ஸ், அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ், மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் சுமார் அரைமணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

Advertisement

இதுபோன்ற பலகட்ட பாதுகாப்பு சோதனைகளால் வெளிநாடு செல்லும் பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தில் ஏறமுடியாமலும், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமலும் பெரிதும் அவதிப்பட்டனர். இப்பாதுகாப்பு சோதனைகளில் பயிற்சி பெற்ற சிஐஎஸ்எப் வீரர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் புரிந்து பேசும் வீரர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News