தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் சோதனையில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement

சென்னை விமானநிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு நேற்றிரவு வந்த ஒரு இ-மெயிலில், ‘சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி சென்னை விமானநிலைய இயக்குநர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினருக்கு அலுவலக ஊழியர்கள் அவசர தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விமான பாதுகாப்பு, ஏர்லைன்ஸ் நிறுவன மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பாதுகாப்பு படை மற்றும் விமானநிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். மேலும், விமான நிலையத்துக்கு சந்தேக நிலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சென்னை விமானநிலையத்தில் கடந்த 2 வாரங்களாக இதேபோல் தொடர்ச்சியாக வெடிகுண்டு புரளிகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை 5 முறை தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுவும் புரளியாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

அனைத்து விமானங்களும் நேற்றிரவு முதல் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதேபோல் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் புரளியை திட்டமிட்டு கிளப்பிவிடும் சமூகவிரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

Related News