தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதல் முறையாக ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்து சேவைகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

135 மின்சார பேருந்துகளில் 55 ஏசி மின்சார பேருந்துகளும், 80 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதற்கான பெரும்பாக்கம் பணிமனை பணியாளர்களுக்கான ஓய்வறை, பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார பேருந்துகளுக்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் 11 வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இன்று முதல் 55 மின்சார ஏசி பேருந்துகள், 80 மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

49.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் மின்சார பேருந்துகள் பணிமனை மற்றும் இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்.