தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செங்கம் அருகே சாலையில் அதிமுகவினர் அமைத்திருந்த அலங்கார வரவேற்பு வளைவு சரிந்து எடப்பாடி மயிரிழையில் தப்பினார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்ததில் எடப்பாடி பழனிசாமி மயிரிழையில் உயிர் தப்பினார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். 2ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி, புதுப்பாளையம் சாலை வழியாக செங்கம் தொகுதிக்கு சென்றார்.

அவரது வாகனத்தை பின் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட கார்கள் சென்றன. எடப்பாடி வருகையை முன்னிட்டு, பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தான நிலையிலும் கட்சி கொடிகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து நேற்று மாலை செங்கத்துக்கு எடப்பாடி வேனில் சென்று கொண்டிருந்தார். செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அவரது வாகனம் சென்றபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ராட்சத அளவிலான அலங்கார வளைவு திடீரென சரிந்து பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது விழுந்தது. அலங்கார வளைவை எடப்பாடி பழனிசாமியின் வாகனம் கடந்த சில நொடிகளில் அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பிரசார பயணத்தில் பங்கேற்ற அதிமுகவினர், சாலையின் குறுக்கே சரிந்து விழுந்த அலங்கார வளைவை அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து சீரானது. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அமைத்திருந்த பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Related News