தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கம் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை

செங்கம்: குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து தாயும் தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கவுரி(30). இவர்களது மகன்கள் கிஷோர்(5) அரசு பள்ளியில் 1ம் வகுப்பும், தேவேஷ்(4) அங்கன்வாடி மையத்திலும் படித்து வந்தனர். செலவுக்கு பணம் தராததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலையிலும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கவுரி மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

நீண்ட நேரமாகியும் திரும்பாததால் உறவினர்கள் கவுரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அந்த செல்போனை தொழிலாளி ஒருவர் எடுத்து, விவசாய கிணற்றின் மேல் கிடந்ததாக தெரிவித்துள்ளார். தகவலறிந்து செங்கம் போலீசார், தீயணைப்பு துறையினருடன் சென்று கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கிணற்றுக்குள் கிடந்த கிஷோர், தேவேஷ், கவுரி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறில் மனமுடைந்த கவுரி, 2 மகன்களையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisement