செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது: உயிர் தப்பிய குடும்பம்
Advertisement
உடனே காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு குமார் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கீழே இறங்கி எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில், காரில் வந்த குடும்பத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசார், பேட்டரியில் மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு நிலவியது.
Advertisement