தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு சிறையில் கைதியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இச்சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசிக்கிமுத்து (22), தங்கதுரை (22) கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது பயத் (22) ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக புதிய கட்டிட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28ம் தேதி இரவு உணவு சாப்பிடுவதற்காக 3 பேரையும் திறந்து விட்டனர். அப்போது 3 பேரும் மற்றொரு கைதியான கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் நாயக் (25) என்பவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.  உடனே சிறைக்காவலர்கள் ஓடி வந்து ராஜேஷ் நாயக்கை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

Advertisement

இதுகுறித்து துணை சிறை அலுவலர் புகழரசி, கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த கைதிகள் புழல் உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Related News