தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டில் காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம்: மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

Advertisement

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 2ம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாள் என முப்பெரும் நிகழ்வை முன்னிட்டு, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவரும் வழக்கறிஞரும் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து காங்கிரசார் இருசக்கர வாகனங்களில் செங்கல்பட்டு நகரப் பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். மேலும், லால்பகதூர் சாஸ்திரி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெ.பாஸ்கர் ஏற்பாட்டில், 1000 பேருக்கு அறுசுவை உணவுகளுடன் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி அன்னதானம் வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மகளிரணி தலைவி வேல்விழி, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மறைமலைநகர் காங்கிரஸ் தலைவர் தனசேகர், கூடுவாஞ்சேரி நகர தலைவர் கிருஷ்ணன், காட்டாங்கொளத்தூர் வட்டாரத் தலைவர் ஜானகிராமன், மதுராந்தகம் வட்டாரத் தலைவர் சத்தியசீலன், பிரியங்கா காந்தி பேரவை மாநில செயலாளர் நடராஜன், ஓபிசி அணி மாநில பொது செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News