தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செங்கல்பட்டு அருகே ஏரி மண் வாங்கிய பெண் கவுன்சிலர் கைது: விற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சட்டவிரோதமாக ஏரி மண் வாங்கி, வயல்வெளியில் கொட்டிய பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். எனினும், சட்டவிரோதமாக ஏரி மண்ணை விற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், மண்ணை வாங்கியவரை மட்டும் கைது செய்து போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, நேதாஜி நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு, செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் பகுதி ஏரியிலிருந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் ஒரு தனியார் நிறுவனம் மண் எடுத்து வருகிறது.

இந்த மண்ணை, அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய பெண் கவுன்சிலர் வாங்கி, தனது வயல்களில் கொட்டி வந்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், வயலில் ஏரி மண்ணுடன் நின்றிருந்த 2 ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ஏரி மண்ணை வாங்கியதாக ஒன்றிய பெண் கவுன்சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்களும் ஒன்றிய பெண் கவுன்சிலரின் உறவினர்களும் கூறுகையில், பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக பலர் ஏரிமண்ணை சட்டவிரோதமாக வாங்கி குவித்து வருகின்றனர். எனினும், போலீசார், ஒன்றிய பெண் கவுன்சிலரை மட்டும் கைது செய்துள்ளனர். இவ்விஷயத்தில் ஏரி மண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்களை விட்டுவிட்டு, வாங்கியவரை மட்டும் கைது செய்தது ஒருதலைபட்சமான நடவடிக்கை. இதுபற்றி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Related News