தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது

 

Advertisement

செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளுக்கு காரில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை செங்கல்பட்டு அருகே பாலூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலிறந்ததும் செங்கல்பட்டு அருகே மெய்யூர் சாலையில் நேற்றிரவு பாலூர் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்ற ஒரு காரின் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த காரை போலீசார் பின்தொடர்ந்து சென்றபோது, சிறிது தொலைவில் நின்றிருந்த காரில், இந்த காரில் கொண்டு வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் மாற்றப்பட்டதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த 2 காரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் பாலாஜி (42), புதுச்சேரியில் இருந்து தனது காரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 516 வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். பின்னர், மற்றொரு காரில் இருந்த சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி என்பவரின் மகன் மோகன் (41) என்பவருக்கு அந்த மதுபாட்டில்களை சப்ளை செய்ததாக தெரியவந்தது. மேலும், இருவரின்மீதும் வெளிமாநில மதுபாட்டில் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து பாலூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்த பாலாஜி, மோகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 516 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News