தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன ஸ்பிரே தெளிக்கப்பட்டு வாழைத்தார்கள் பழுக்க வைப்பு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுக்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் ரசாயன ஸ்பிரே மூலம் பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது;
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைத்தார்களை பழுக்கவைக்க ரசாயன ஸ்பிரே அடிக்கின்றனர்.இயற்கையான முறையில் பழுக்கவைக்க வேண்டும். ஆனால் பழங்களை பழுக்கவைக்க ‘எத்தனால்’ என்ற வேதிப்பொருளை பயன்படுத்துகின்றனர். இது மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். மீறி ரசாயன ஸ்பிரே செய்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்போம் என்று தெரிவித்தபோது அதுபற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, இதனை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஸ்பிரே மூலம் வாழைத்தார்களை பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுவதாக அங்காடி நிர்வாகம் அலுவலகத்தில் புகார் அளித்தபோது முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்து பழங்களுக்கு ஸ்பிரே அடிக்கும் கடையின் உரிமையாளரை எச்சரித்து ஒரு கடைக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதனால் ஸ்பிரே மூலம் பழுக்கவைப்பது தடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஸ்பிரே மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இந்த நிலையில், நாளை காலை 11 மணி அளவில், உணவு தானிய மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் பழ வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

 

Advertisement

Related News