தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 4 பேர் பலி

Advertisement

மும்பை: மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது. பாய்லர் வெடித்த சத்தம் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு கேட்டு கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் தொழிற்சாலைக்கு அருகே இருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கார் ஷோரூம் உள்பட 2 கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் 8 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

25 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News