தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி 100% நிரம்பியது: பூண்டி, புழல் ஏரிகளும் நிரம்பின

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு அதிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரி ஆகியவை ஏற்கனவே 100 சதவீதம் நிரம்பியது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் நேற்று 100 சதவீதம் நிரம்பியது.

Advertisement

அதன்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 35 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3231 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் மற்றும் வரத்து கால்வாய் மூலம் வினாடிக்கு 1050 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடியும் நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 24 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3645 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதன் மூலம் ஏரி 100 சதவீதம் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏரிக்கு மழைநீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியும், இணைப்புக் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 100 கன அடியும் நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வினாடிக்கு 250 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 21.20 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3300 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 170 கன அடியும், இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 90 கன அடியும் நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி வீதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் ஏரியிலிருந்து வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 12.58 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 532 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 35.59 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 464 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 11172 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பி, கடல்போல் காட்சியளிகிறது. கடந்த 2015ம் ஆண்டு 23.45 அடி நீரை தேக்கி வைத்ததே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஏரியின் மதகுகள், ஏரிக்கரைகள் பலத்தை கண்டறிவதற்காக மொத்த உயரம் 24 அடி நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்து 100 சதவீதம் தேக்கி வைத்துள்ளனர். தற்போது ஏரியில் உள்ள ஷட்டர்களுக்கு சென்சார் மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால், சென்னையில் இருந்தே ஏரியின் நீர்மட்டம் அறிந்து கொள்ளுதல், அங்கிருந்தே உபரிநீரை திறக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளதால், தற்போது 100 சதவீதம் நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தேக்கி வைத்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி உருவாக்கப்பட்டு முதல்முறையாக 100 சதவீதம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளும் ஒரே நேரத்தில் 100 சதவீதம் நிரம்பியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement