செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 750 கன அடியாக அதிகரிப்பு..!!
காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 அடியில் இருந்து 750 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிய நிலையில் முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வர்த்து 2220 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 20.84 அடியாக உள்ளது.
Advertisement
Advertisement