தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு காசோலை, பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 கலைப் பிரிவுகளில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி ஆவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
Advertisement

இதற்கான பரிசளிப்பு விழா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம் முன்னிலை வகித்தார்.

குரலிசை பிரிவில் முதல் பரிசு ஆர்.கௌதம், 2ம் பரிசு தி.சாருகாசி, 3ம் பரிசு த.தவசீலி, கருவியிசை பிரிவில் முதல் பரிசு (நாதஸ்வரம்) எம்.வெங்கடேஸ்வரன், 2ம் பரிசு (தவில்) வி.தினேஷ், 3ம் பரிசு (நாதஸ்வரம்) டி.குகன், பரதநாட்டியம் பிரிவில் முதல் பரிசு ம.சுகி பிரார்த்தனா, 2ம் பரிசு ரா.வனமாலிகா, 3ம் பரிசு டி.கே.கிரிதர்ஷினி, கிராமிய நடன பிரிவில் முதல் பரிசு பி.பிரசன்னா, 2ம் பரிசு உ.அ.ஷியாம் கிஷோர், 3ம் பரிசு நா.கௌதமி, ஓவிய பிரிவில் முதல் பரிசு மு.மணிகண்டன், 2ம் பரிசு ஆர்.அபிராமி, 3ம் பரிசு ரா.லிவ்ய  ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதன்படி முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.4,500 ம், 3ம் பரிசாக ரூ.3,500 வீதம் 5 கலைப் பிரிவுகளில் மொத்தம் 15 வெற்றியாளர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

 

Advertisement