தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெளிநாட்டு நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் செய்தி பத்திரிகை வெளியிட தடை: ஒன்றிய உள்துறை புதிய நிபந்தனை

புதுடெல்லி: வெளிநாட்டு நிதி உதவி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* இனிமேல், வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதி கோரும் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நிதியுதவி மற்றும் பணமோசடிக்கான உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) நன்னடத்தை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

* சொத்துக்கள், வரவு செலவு கணக்கு உள்ளிட்ட கடந்த 3 நிதியாண்டுகளின் நிதி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை இணைக்க வேண்டும்.

* ஒருவேளை சம்மந்தப்பட்ட சங்கமோ அல்லது தொண்டு நிறுவனமோ பப்ளிகேஷன் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவர்களின் நோக்கமாக அது இருந்தாலோ வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டம் 2010க்கு முழுமையாக இணங்குவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

* சங்கத்தின் பப்ளிகேஷன் இந்திய செய்தித்தாள் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டது எனில், கட்டாயம் பதிவாளரிடம் இருந்து ‘செய்தித்தாள் அல்ல’ என்ற சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related News