தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக பயணம்: ஆணையர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

சென்னை: புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக பயணத்தை திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிக பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருவதோடு, ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

Advertisement

2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையில், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிக பயணமாக அழைத்து செல்லும் திட்டம் கடந்தாண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்.

இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக, நேற்று இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஸ்ரீதர், 70 பக்தர்களுக்கு பயண வழி பைகளையும், கோயில் பிரசாதங்களையும் வழங்கி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களிலிருந்து 500 பக்தர்கள் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பக்தர்களுக்கு கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோயில் பிரசாதம், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்வில் கூடுதல் ஆணையர் மங்கையர்க்கரசி, சிறப்பு பணி அலுவலர் லட்சுமணன், இணை ஆணையர்கள் வான்மதி, ரேணுகாதேவி, கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சி.நித்யா, உதவி ஆணையர் பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News