தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அழகர்கோயிலில் ஆடி தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்

 

மதுரை: அழகர்கோயிலில் ஆக.9ம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கு முழுவீச்சில் தேர் தயாராகி வருகிறது. மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 4ம் நாளான இன்று கருட வாகனத்தில் எழுந்தருளி சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மற்றும் பதினெட்டாம்படி கதவுகள் திறப்பு ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8.40 மணிக்கு மேல் 8.55 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் பதினெட்டாம்படி கதவுகள் திறக்கப்பட்டடு படிபூஜைகள் நடைபெற்று சந்தனம் சாற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆக.9ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் முழுவீச்சில் தயாராகி வருகிறது. குறிப்பாக தேர் சக்கரங்கள் சரிபார்த்தல், தேரில் கட்டைகள் அடுக்குதல், வடக்கயிறு பொருத்துதல், வர்ண கொடை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆடி திருவிழாவையொட்டி கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.