தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.3 கோடி மோசடி வழக்கில் அதிமுக மாஜி அமைச்சருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ரூ.3 கோடி மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர், கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளை வழக்கு பதிவு செய்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இதில், ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளிவந்தார்.

Advertisement

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திர பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராயினர். அவர்களுக்கு 2 வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 10-10-2025ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

Advertisement

Related News