தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சார்ஜ் போட்டபோது வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்தது: புகைமூட்டத்தால் பயணிகள் அலறல்

ஜோலார்பேட்டை: வாணியம்பாடி அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் திடீரென வெடித்ததில் ரயில் பெட்டியில் புகை சூழ்ந்தது. பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை மைசூர் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்பட்ட சி11 கோச்சில் பயணம் செய்த குஷ்நாத்கர் (31) என்ற பயணி தனது செல்போனை சார்ஜரில் போட்டு இருந்தார்.
Advertisement

ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தை கடந்தபோது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென வெடித்தது. இதனால் செல்போன் எரிந்து அந்த பெட்டியில் புகை சூழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சி11, சி 12 பெட்டிகளில் செல்போன் வெடித்த புகை சூழ்ந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து இரண்டு பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் புகையை அகற்றினர். அதன் பிறகு ரயில் அரை மணி நேரம் தாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது.

Advertisement