தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கப் பதிவு வலைத்தளங்களில் பகிரப்பட்டதா? கைதான 2 பேரின் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு

Advertisement

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை பக்தர் ஒருவரின் குடும்பத்தினர் உடை மாற்றியபோது, அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரகசிய கேமராக்கள், செல்போன், மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் உள்ளன. கடந்த ஒரு வருடமாக இவர்கள் உடை மாற்றும் பெண்களை, ரகசிய வீடியோ எடுத்து வந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் இருவரும் பார்வையிடுவதற்காக பதிவு செய்யப்பட்டதா? அல்லது நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்பட்டதா? அல்லது இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டதா? இவர்கள் குழுக்களாக பிரிந்து இவ்வாறு செயல்படுகின்றனரா என பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் கோயில் போலீசார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதான 2 பேருக்கும் மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்களிடம் செல்போன்களைளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

Related News