தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி கூடுதல் டிஜிபி இரவோடு இரவாக அமெரிக்கா ஓட்டம்: முதன்மை செயலாளருக்கு கண்டிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கியதில் மோசடி நடந்ததாக கூறி முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவுபடி சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சந்திரபாபுவை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அமராவதி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு, பைபர் நெட் முறைகேடு என அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் சந்திரபாபு முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியான பிறகு முதன்மை செயலாளர் ஜவகரிடம் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் ஒரு நாள் முன்னதாக விடுமுறை அளித்ததுபோல் கையெழுத்திட்டு வழங்கினார். இதனால் சஞ்சய் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நேற்று காலை டெல்லி செல்வதற்கு முன்பு தன்னை சந்திக்க மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு வந்த முதன்மை செயலாளர் ஜவகரிடம் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது சஞ்சய்யை ஏன் விடுப்பில் அனுப்பினீர்கள் என கோபமடைந்ததாக கூறப்படுகிறது.
Advertisement

Advertisement