தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!!
10:42 AM Aug 08, 2025 IST
சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.