இறுதி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுங்கள்: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்
Advertisement
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், தங்கள் சான்றிதழை நவம்பர் 9ம் தேதி(நேற்று) முதல் வருகிற 21ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று டின்பிஎஸ்சி அறிவித்தது. இதையடுத்து தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்கள் இறுதி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Advertisement