தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.1700 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா; பல்லாவரத்துக்கு நாளை வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரத்தில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை திறப்பு விழா நாளை காலை 9 மணியளவில் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் 25 ஆயிரம் ஏழை, எளியவர்களுக்கு ரூ.1700 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடக்கிறது. இருவிழாக்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். முதலில் தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு ஆலந்தூர் தொகுதி கண்டோன்மெண்ட் பழைய டிரங்க் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடலில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 25,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசுகிறார்.

விழாவில் கலந்துகொள்ள தாம்பரம் மற்றும் பல்லாவரத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு, பல்லாவரம் பான்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் ஆயிரக்கணக்கான திமுகவினர், பொதுமக்கள் அணி திரண்டு கோலாகலமான வரவேற்பு அளிக்க உள்ளனர். இதையடுத்து பல்லாவரத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு, கண்டோன்மெண்ட் பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் விழா நடைபெறும் இடம் வரை பொதுமக்கள், திமுகவினர் ஆர்ப்பரித்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இரு நிகழ்ச்சியிலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுகவினர் அலைகடலென திரண்டு வந்து எழுச்சியான முறையில் வரவேற்பு அளித்திடவேண்டும் என அழைக்கிறேன். லட்சிய உணர்வோடு திமுகவினர் அனைவரும் கரங்களில் திமுக கொடியேந்தி வர அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Related News