தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ்(39). இவரது மனைவி வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நாகேஸ்வரராவ் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.
Advertisement

இதற்காக குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி மனைவி வெங்கடலட்சுமி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளார். இதனால் நாகேஸ்வரராவ் குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார். இந்நிலையில் நாகேஸ்வரராவ் நேற்றிரவு மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் பேசியபடியே திடீரென கதவை தாழிட்டுக்கொண்டு போனை நாகேஸ்வரராவ் ‘சுவிட்ச் ஆப்’ செய்ததாக கூறப்படுகிறது.

தனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினருக்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்தபோது நாகேஸ்வரராவ் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரராவ் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News