மத்திய சென்னை திமுகவின் கோட்டை: திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி
Advertisement
வீடு வீடாக சென்று தயாநிதி மாறன் தீவிர வாக்கு சேகரித்த தயாநிதி மாறனுக்கு வழிநெடுகிலும் முகமலர்ச்சியோடு கையசைத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். வீதி, வீதியாகச் செல்லும் தயாநிதிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாநிதி மாறன்; மத்திய சென்னை திமுகவின் கோட்டை. இதேபோல தான் தமிழகமெங்கும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல்,. அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் வரும் வெள்ளிக்கிழமை உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் என்று கூறினார்.
Advertisement