தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய சென்னை திமுகவின் கோட்டை: திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி

சென்னை: மத்திய சென்னை திமுகவின் கோட்டை என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பரப்புரையில் அனல் பறக்கிறது. அந்த வகையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தார்.
Advertisement

வீடு வீடாக சென்று தயாநிதி மாறன் தீவிர வாக்கு சேகரித்த தயாநிதி மாறனுக்கு வழிநெடுகிலும் முகமலர்ச்சியோடு கையசைத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். வீதி, வீதியாகச் செல்லும் தயாநிதிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாநிதி மாறன்; மத்திய சென்னை திமுகவின் கோட்டை. இதேபோல தான் தமிழகமெங்கும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல்,. அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் வரும் வெள்ளிக்கிழமை உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் என்று கூறினார்.

Advertisement

Related News