தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமண மண்டபம், ஓட்டல்களில் மிச்சமாகி வீணாகும் உணவுகளை சேமிக்கும் மையம் மாநிலம் முழுவதும் தொடங்க வேண்டும்

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெங்களூரு : மாநிலத்தில் வீடு, ஓட்டல், திருமண மண்டபம், பொது இடங்களில் வீணாகும் உணவுகளை சேமிக்க மாநில அரசின் சார்பில் உணவு ேசமிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் உணவு கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். நமது நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் உணவு தானிய உற்பத்தி இருந்தாலும், குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அவை கிடைக்காததால் பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் சிறிய ஓட்டல் முதல் நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், கோயில் உள்பட பல இடங்களில் மக்கள் சாப்பிடு வதற்காக தயாரிக்கப்படும் உணவுகள் மிச்சமாகி வீணாக்கப்படுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நமது நாட்டில் ஓராண்டில் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான உணவுகள் வீணாகி வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டில் வீணாகும் உணவுகளுடன் ஒப்பிடும்போது சீனா நாட்டில் ஓராண்டு உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களுக்கு சமமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், இத்தாலி உள்பட பல நாடுகளில் வீணாகும் உணவுகளை பதப்படுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி பதப்படுத்தப்படும் உணவுகளை ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டத்தை நமது நாட்டிலும் செயல்படுத்தும் நோக்கத்தில் உணவு வீணாவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன், கர்நாடக மாநிலம் தும்கூருவில் உணவு பதப்படுத்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்கள், மாநகரங்கள், இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்களிலும் தொடங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.