தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லறை தோட்டம், கபர்ஸ்தான்கள் புனரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: பேரவையில் அமைச்சர் நாசர் அறிவிப்பு

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் நாசர் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:

* சென்னை, திருநெல்வேலி, கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் புதிதாக தொடங்கப்படும். இச்சங்கங்களுக்கு விதைத் தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் 7 சங்கங்களுக்கு ரூ.7 லட்சம் வழங்கப்படும்.

* கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களில் உள்ள பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைத்தல், புதிதாக சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் பாதைகளை புனரமைக்க முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு சவுதி அரபியாவில் உள்ள புனித தலமான மக்கா மற்றும் மதினா, கிறித்துவர்களுக்கு இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கப்படுவதை போன்று, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவிலுள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 லட்சம் மானியம் வழங்கப்படும்.

Advertisement

Related News