தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

பூந்தமல்லி: அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் வில்சன்(35), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் திருவேற்காடு அடுத்த பெருமாளாகரம் பகுதியில் இறந்து போனதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அவரது மனைவியுடன் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த வில்சன் அங்கு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அவரது மனைவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த அவரது உறவினர்கள் வில்சனை அடித்ததாகவும் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வில்சன் அந்த பகுதியில் வீட்டின் மீது அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தன்னை அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து திருவேற்காடு போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டவர் மீது ஏறியவரை கீழே இறங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த நபர் கீழே இறங்க மறுத்ததால் அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வில்சனை அடித்த நபரை போலீசார் வேனில் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். இதனைப் பார்த்த பிறகு தான் வில்சன் செல்போன் டவர் மேல் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.