தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் குண்டுமழை குழந்தைகள் உட்பட 104 பேர் பலி

டெயிர் அல் பலாஹ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சியால், கடந்த 10ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடக்கம் முதலே முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகர் அருகே இஸ்ரேல் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement

மேலும் போரின் தொடக்கத்தில் மீட்கப்பட்ட பணய கைதியின் சில உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்ததை தொடர்ந்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மீது ‘சக்திவாய்ந்த’ தாக்குதல்களை நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து காசா மீது, விமானங்கள், பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இதில் மொத்தம் 104 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 39 பேர் குழந்தைகள், 12 பேர் பெண்கள். இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உயிரிழந்த மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

* போர் நிறுத்தம் மீண்டும் அமல்

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீன எல்லைக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்புக்கள் இஸ்ரேல் படைகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது. காசாவிற்குள் தீவிரவாத இலக்குகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்கப்பட்டு தாக்குதல்களை முடித்த பின், போர் நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறினால் உடனடியாக உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Advertisement