தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்கப்படுமா?: சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

 

Advertisement

திருப்போரூர்: மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் உள்ளது. இங்கு, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஐஐஐடி கல்வி நிறுவனம், போலீஸ் குடியிருப்பு, உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம், வெல்டிங் ராடு தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை உள்ளன.

இதுமட்டுமின்றி கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், இரத்தினமங்கலம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, மருந்து, ஜவுளி போன்றவற்றை வாங்க மேலக்கோட்டையூர் மற்றும் கண்டிகை சந்திப்பு பகுதிக்கு வருகின்றனர்.

இதன் காரணமாக, இப்பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உருவாகி உள்ளன. அதிகமாக மக்கள் வருகை தருவதால் சாலைகளிலும், கடைகளிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதை, பயன்படுத்தி சமூக விரோதிகள் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, பணம் திருட்டு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். மேலும், இப்பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலத்த காயம் மற்றும் இறப்பு போன்றவை நடக்கிறது. இந்த, விபத்துகளில் ஏற்படும் வாகனங்கள் முறையான புகார் இன்றி சென்று விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதில் பின்னடைவு ஏற்படுகிறது. ஆகவே மேலக்கோட்டையூர், இராஜீவ்காந்தி நகர், வண்டலூர் சாலை, வேங்கடமங்கலம் சாலை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும், போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement