தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டும் லாரிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா

*மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர் : மணலி மண்டலத்தில் மணல் கடத்தல் மற்றும் பொது இடங்களில் விதிமீறி குப்பை கழிவுகளை கொட்டும் லாரிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மணலி மண்டலத்திற்கு உட்பட்ட சடையங்குப்பம், இடையஞ்சாவடி, கொசப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் சிலர் மாநகராட்சி அனுமதியின்றி தனியார் நிறுவனத்தின் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

பின்னர் அதில் உள்ள இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுக்க குப்பையை தீ வைத்து கொளுத்துகின்றனர். இவ்வாறு குப்பை தீயிட்டு கொளுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

 

இந்நிலையில், மணல் கடத்தல் மற்றும் குப்பைக் கழிவுகளை கொண்டு வந்து, விதிமீறி பொது இடங்களில் கொட்டும் லாரிகளை கண்காணிக்க முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் 12 இடங்களை தேர்வு செய்து அங்கு சிசிடிவி கேமராவை பொருத்த திட்டமிட்டனர். முதல் கட்டமாக 15வது வார்டு நாப்பாளையம் மேம்பாலம் மற்றும் இடையஞ்சாவடி, 16வது வார்டு சடையங்குப்பம் இணைப்பு சாலை உள்ளிட்ட 4 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இதன் மூலம் குப்பை மற்றும் மணல் லாரிகள் கண்காணிக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீதமுள்ள இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.