தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழா கோலாகலம்: தெய்வங்களின் வேடமணிந்த சிறுவர்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா குழும பள்ளி சார்பில், நவராத்திரி விழாவையொட்டி தேரடி தெருவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் மலர்களாலும் அலங் கரிக்கப்பட்டு சிறுவர்களிடமிருந்து பெறப்பட்ட பொம்மைகளை கொண்டு நவராத்திரி விழா கொலு அமைத்தனர்.

Advertisement

நிகழ்ச்சிக்கு, விவேகானந்தா குழும பள்ளி தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹரினாக்ஷி, பள்ளி இயக்குனர் மங்கையர்கரசி, சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சீதாலட்சுமி, புல முதல்வர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் திலகவதி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், பள்ளி சிறுவர்கள், தெய்வங்களின் வேடம் அணிந்தும் வண்ண உடைய அணிந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தி பாடல்களை பாடி அசத்தினர்.

மேலும் ஆசிரியர்கள் நவராத்திரி விழா குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளக்கி பேசினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை தொடங்கிய நவராத்திரி விழா வரும் 3ம்தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விவேகானந்தா குழும பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது.

Advertisement