தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஜித்குமார் மரண வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 6 வார கெடு: சிபிஐக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாரீஸ்குமார், தீரன்திருமுருகன், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் மனு செய்திருந்தனர்.

Advertisement

இந்த மனுக்கள் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில், எப்ஐஆர், முதல் கட்ட இறுதி அறிக்கை ஆகியவற்றின் நகல்களை கேட்டு செப்.8ல் விசாரணை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. எனவே, இவற்றை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 6 வாரத்திற்குள் இறுதி குற்ற பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அஜித் குமார் மரண வழக்கோடு, நிகிதாவின் நகை திருட்டு புகார் வழக்கையும் சேர்த்து விசாரித்து 6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Advertisement

Related News