திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை
05:16 PM Aug 12, 2025 IST
திருப்புவனம்: மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் 28ல் விசாரணையின்போது இளைஞர் அஜித்குமாரை தனிப்படை போலீஸ் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்தது. ஜூலை 12ம் தேதி முதல் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. திருப்புவனம் காவல் நிலையத்தில் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்