தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

Advertisement

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழ்நாடு எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது கபினி அணையில் இருந்து நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

Advertisement

Related News